districts

img

ஜெகன் கவுரவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 27- காதல் திருமணம் செய்து கொண்ட  ஜெகன் வெட்டி படுகொலை செய்யப் பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                      கணவனை இழந்த சரண்யாவுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நந்திஸ் சுவாதி சாதி ஆணவ படுகொலையை தொடர்ந்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இதுபோன்ற கொலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. எனவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்  தொடரில் சாதி ஆணவப் படுகொலை களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர் டில்லிபாபு,    தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்  தலைவர் ஜி.ஆனந்தன் ஆகியோர் வலியுறுத்தினர். துணைத் தலைவர் இருதயராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலை வர் நாராயணமூர்த்தி, சிபிஎம் மாவட்டச்  செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன்,  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், பண்ணி ஆண்டி நலச்சங்க  மாவட்டத் தலைவர் சீனிவாசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன், மாதர் சங்க மாநகரச் செயலாளர் ரத்தினா, தலைவர் புனிதா, பொருளாளர் சரஸ்வதி ஆகியோர் பேசினர்.