districts

img

கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு, கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர், செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டச் செயலாளர் முனியப்பா, வட்டக், குழு உறுப்பினர்கள் முருகேஷ், சீனிவாசன், விஜயகுமார், சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.