கிருஷ்ணகிரி, பிப் 15- மக்களின் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் ஒன்றியச் செய லாளர் ராஜாரெட்டி, மாநகர செயலாளர் சி.பி. ஜெயராமன் தலைமையில் கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கி நடை பெற்றது. உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் என 10 கோரிக் கைகளை முன்வைத்து கெலவரப் பள்ளியில் தொடங்கிய பிரச்சாரத்தை காவல்துறையினர் வட்டாட்சியர், வருவாய்த் துறை யினரும் பல இடங்களில் தடுத்து நிறுத்திய போதும், தடை களைக் கடந்து பிரச்சாரம் நடை பெற்றது. இறுதியில் அரசு அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னர். அதனடிப்படையில் சாமுண்டி நகரில் உள்ள ஆற்று புறம்போக்கு பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆக்கிரமிப்பாளரால் தொடர்ந்து இடையூறுக்கு ஆளாக்கப்பட்ட பசப்பா வீட்டின் கழிவுநீர் செல்வதற்கும், பின்புறம் உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டது. ஓசூர் ராயக்கோட்டை சாலை விரிவாக்கத்திற்காக ஒன்னல் வாடியில் அப்புறப்படுத்த இருக்கும் 42 குடியிருப்புகளுக்கு மாற்று இடம் தொகுப்பு வீடு கள் வழங்க சாராட்சியர் சரண்யா ஆணையிட்டார். ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். இப்படி சில கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ள நிலையில், அதி காரிகள் வாக்குறுதி அளித்தபடி சித்தனபள்ளி, புனுகன்தொட்டி கிராமங்களுக்கு சுடுகாடு அமைக்க நிலம் ஒதுக்க வேண்டும், கோயில் நிலம் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும், மாநகராட்சிக்கு தேவை யான ஊழியர்கள், தூய்மை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 200 விழுக்காடு மேல் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் கட்டணம், வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நகர சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீதும் மாவட்ட ஆட்சியர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.