கிருஷ்ணகிரி, டிச.27 - கிருஷ்ணகிரியில் ரூ.50 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அர. சக்கரபாணியிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த ஒருவர், தனது சகோதரி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 7 கிளைகளை ஏற்படுத்தி கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர். அதை நம்பி, போச்சம் பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வர்கள் மற்றும், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் உட்பட, ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக ரூ. 50 கோடிக்கும் அதிகமாக கட்டி ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, ஆய்வுக் கூட்டத்தை முடித்து திரும்பிய அமைச்சர் சக்கரபாணியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து மனு கொடுத்த னர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கூறி உள்ளேன். உங்கள் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.