districts

img

அருங்காட்சியகத்தில் பீரங்கி கல் குண்டு

கிருஷ்ணகிரி, ஏப். 27- கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாதம் ஒரு வரலாற்று பொருள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. அதன்படி, இந்த மாதம் பீரங்கியின் கல் குண்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராசு கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல மலைக் கோட்டைகள் உள்ளன. கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, n ஜகதேவி, மகா ராஜ கடை, தட்டக்கல், வீரபத்ரதுர்க்கம், நாகமலை, மல்லி கார்ஜூனதுர்க்கம் ஆகிய மலைகளில் கோட்டைகள் உள்ளது குறிப்பிடத்தக்கவைகளாகும். மண்ணால் ஆன தரைக்கோட்டைகள் இருந்ததற்கான தடயங்களும் சில இடங்களில் கண்டறியப் பட்டுள்ளன. பீரங்கி கல் குண்டுகள் தயாரிக்க உறுதி யற்ற கருங்கற்களே தேர்ந்தெடுக்கப் படுகின்றன. ஏனெனில் அவைதான் பீரங்கியில் இருந்து வெடிமருந்தின் உதவியுடன் வேகமாக வெடித்து சிதறும் போது எளிதில் பல சிறு துண்டுகளாக உடைந்து பல பேரை ஒரே நேரத்தில் தாக்கும். தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கல்குண்டு சிறிய அளவுடையது. இவை 10 செ.மீ. விட்டமும், 2 கிலோ எடையும் கொண்டதாகும் என்றார்.