கிருஷ்ணகிரி, நவ. 6- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை பகுதி யில் பொதுமக்கள் பொழுது போக்கும் விதமாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த பூங்காவுக்கு பொதுமக்க ளிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளிகளில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பார்ப்ப தற்கு வாரம் அல்லது மாதம் ஒருமுறை ஞாயிற் றுக்கிழமை நாட்களில் வந்து தங்களது பிள்ளைகளுடன் பூங்காவுக்கு வந்து பேசி மகிழ்ந்து விட்டு சென்றனர். ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள பொதுமக்கள் பள்ளி விடுமுறை நாட்க ளில் தங்களது குழந்தைக ளுடன் வந்து பாம்பாறு அணையை சுற்றிபார்க்க வும், பூங்காவில் அமர்ந்து உணவருந்தவும், பேசவும் மரங்களை சுற்றி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடு வதற்காக விளையாட்டு பொம்மைகள், ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டு உபகரணங்கள் இருந்தன. நிழல் தரும் மரங் கள், கண்கவரும் மலர்கள் என மக்களை கவரும் வித மாக பல்வேறு அம்சங்க ளோடு பூங்கா இருந்தது. பூங்காவிற்கு வரும் பொது மக்களிடம் பரா மரிப்பு கட்டணமும், வாக னங்களுக்கு பாதுகாப்பு கட்டணங்களும் வசூலிக்கப் பட்டன. ஆனால் தற்போது பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு திடல் உபகரணங்கள் சிதில மடைந்து கிடக்கிறது. பூச்செடிகள், மரங்கள் போதிய பராமரிப்பின்றி காய்ந்து கிடக்கிறது. பாம் பாறு அணையில் போதிய தண்ணீர் இருந்தும் மரங்கள் காய்ந்து கருகி வருகிறது. பூங்காவை சுற்றி முட்பு தர்கள் மண்டி கிடக்கிறது. மரங்களைச் சுற்றி அமைக் கப்பட்ட மேடைகள் சிதில மடைந்து கிடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.