districts

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம்

கிருஷ்ணகிரி, ஏப். 18- மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படித்த இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல் பதிவு செய்து ஓராண்டு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் தகுதி உடையவர்கள். மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழகத்தில் முடிந்து 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.