கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சக்கர ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பயணாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். இதில் ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, கோபாலகிருஷ்ணன், சென்னீரப்பா, யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.