districts

img

ஊராட்சிமன்ற பணிகளில் 3ஆவது நபர் தலையீடு: துணைத் தலைவர் புகார்

கிருஷ்ணகிரி, மே 24- கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டேகுப்பம் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் பெண் தலைவருக்கு பதிலாக நாராயணன் என்பவர் தலையீடுவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்யப்பட்டுள்ளது. காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் சுண்டேகுப்பம் ஊராட்சிமன்றத் தலைவராக எல்லம்மாள் சிவக்குமாரும், துணைத் தலைவராக லட்சுமி குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், கடந்த ஓராண்டாக சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் தலையிட்டு தலைவர் இருக்கையில் அமர்ந்து ஆணையிடுவதும்,  ஊராட்சிமன்றப் பணிகள், நலதிட்ட உதவிகளை தானே முன் நின்று செய்து வருகிறார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய துணைத் தலைவர் லட்சுமி, வார்டு உறுப்பினர்களை மிரட்டிவதுடன், அலுவலகத்திலிருந்து விரட்டியடித்து வருகிறார். இந்நிலையில், கண்டேகுப்பம் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் தலைவர் எல்லம்மாவுக்கு பதிலாக ஊராட்சிமன்ற நிர்வாகத்திற்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத நபர் நாராயணன் தலையிட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.