காஞ்சிபுரம், ஏப். 2 - மாணவர்களின் பேச்சுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் மரத்தடியில் அமர்ந்து ரசித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக உள்ள ஆர்த்தி, அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொள்கிறார். பொது மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரம், ஐயங்கார் குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மாணவரகளின் பேச்சுபோட்டி நடைபெற்றது. இதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்ற வந்த ஆட்சியர் ஆர்த்தி மாணவர்க ளுடன் மரத்தடி திண்ணையில் அமர்ந்து பேச்சுப் போட்டியை ரசித்தார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மஞ்சப்பை களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.