districts

img

சங்கரய்யா நூற்றாண்டு நிறைவு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

காஞ்சிபுரம், ஜூன் 7 - விடுதலை போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரத்தில்  மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது  3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு `இயற்கை காட்சிகள்’ என்ற தலைப்பிலும், 6 முதல் 10-ம்  வகுப்பு வரையிலான மாணவ, மாணவிக ளுக்கு `சுதந்திர போரட்ட வீரர்கள்’ என்ற  தலைப்பிலும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.  இதில், ஏராளமான மாணவர்கள் ஆர்வத் தோடு பங்கேற்றனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.உதயகுமார், விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, கைத்தறி மாவட்டச் செயலாளர் வி.சிவப்பிரகாசம், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவர் பி.கே.வேணுகோபால், மாவட்ட துணை செயலாளர் கே.யுவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சூரியபாரதி ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.