காஞ்சிபுரம், பிப்.1 காஞ்சிபுரம் மாவட்டத் தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 156 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 384 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், பதற்றமான 88 வாக்குச்சாவடிகள் வெப் ஸ்டீரிமிங் எனப்படும் இணையவழியில் கண்காணி க்கப்படும். மாவட்டத்தில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகை யில் காஞ்சிபுரம் நகராட்சிக்கு 2 பறக்கும் படைகளும், மற்ற இடங்களுக்கு தலா ஒரு பறக்கும் படையும் என 7 பறக்கும்படை செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திர மேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் ஆகியனவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை பொன்னேரிக் கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெறும். குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை அருகே சிறு களத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.