காஞ்சிபுரம், ஜூன் 18 - காஞ்சிபுரத்திலுள்ள வேகவதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடியி ருப்போர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் குடியி ருக்கும் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அதிரடி யாக இடிக்க மாவட்ட நிர்வா கம் திட்டமிட்டுள்ளது முதல் வர் அறிவிப்புக்கு மாற்றாக மாவட்ட நிர்வாகம் செயல் படக்கூடாது என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாநகரக்குழு சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. மாநகரச் செயலாளர் டி. ஸ்ரீதர் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் இ.முத்துக் குமார், மாவட்டச் செயலா ளர் சி.சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சௌந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.சிவப்பிர காசம், எஸ்.உதயகுமார், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஜி.எஸ்.வெங்கடேசன், ஜி. லட்சமிபதி, சி.மகேந்திரன், இ.சங்கர், எம்.சூரியபாரதி உள்ளிட்ட 500க்கும் மேற்பட் டோர் இதில் கலந்து கொண்ட னர்.