districts

பரந்தூரில் குவியும் களியன் வாத்துக்கள்

காஞ்சிபுரம், மார்ச் 20- காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் ஏரியில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிக அளவில் களியன் வாத்துக்கள் குவிந்து இருப்பது தெரிந்தது. தமிழகத்தில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி களில் ஒருங்கிணைந்த பறவை கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இது 15 மாவட்டங்களில் உள்ள 311 நீர்நீலைகளில் கணக்கெ டுப்பு மேற்கொள்ளப்பட்டது. காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் ஏரியில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிக அளவில் களியன் வாத்துக்கள் குவிந்திருப்பது தெரிந்தது. வனத்துறையினரின் ஏற்பாட்டில் தனியார் அமைப்பினர் தினந்தோறும் மேற்கொண்ட துல்லிய ஆய்வில் 12 தனித்தனி கூட்டங்களாக 2,100 களியன் வாத்துக்கள் பரந்தூர் ஏரியில் முகாமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பரந்தூர் ஏரி புதிய சரணாலயமாக மாறி உள்ளது.