districts

img

நீர்நிலையில் கொட்டப்படும் குப்பைகள்

காஞ்சிபுரம், பிப். 13- காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் 4 ஆயிரத் துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த பகுதி யில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்நிலையில் ஊராட்சியில் நீர்நிலை கள் உள்ள பகுதிகள் மற்றும் சாலை யோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நீர்நிலை கள் மாசடைந்து வருகிறது. கொட்டப்படும் குப்பைகளை கால்நடைகள் தின்று பாதிப்படைந்து வருகிறது. எனவே நீர்நிலை பகுதிகளில் கொட்டப் படும் குப்பைகளை அகற்ற ஊரக வளர்ச்சி துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய  வட்டார வளர்சி அதிகாரிகள், பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.