districts

வாலாஜாபாத் அருகே இடிதாக்கி விவசாயி பலி

காஞ்சிபுரம், ஜூன் 7 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் வியாழனன்று இரவு விவசாய பணிக்காக  நிலத்துக்கு  சென்ற விவசாயி இடி தக்கி பலியானார்.

காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித் திருந்தது. அவ்வகையில் அவ்வப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும் லேசான மழையும் பெய்து வருகிறது. காஞ்சிபுரம் உத்தரமேரூர் வாலாஜாபாத் திருப்பெரும்புதூர் குன்றத்தூர் பல இடங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை மழை பெய்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரத்தில் 33 மில்லி மீட்டரும், உத்தரமேரூரில் 13 மில்லி மீட்டரும், வாலாஜாபாத்தில் 89 மில்லி  மீட்டரும், திருப்பெரும்புதூரில் 29 மில்லி  மீட்டரும், குன்றத்தூரில் 22 மில்லிமீட்டரும், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் பகுதியில் மில்லி மீட்டர் 14 என மொத்தம் 200.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தின் சராசரி மழை பதிவாக 33.4 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளதாக காஞ்சி புரம் மாவட்ட பேரிடர் மையம் அறிவித் துள்ளது.

இந்நிலையில் வாலாஜாபாத்தில் அதிக  கன மழை பெய்த நிலையில் வாலாஜாபாத்  அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற விவசாயி தனது  விவசாய நிலத்திற்கு சென்றபோது இரவு 9  மணி அளவில் இடி தாக்கி மயங்கி விழுந்தார். உடனிருந்த அவரது உறவினர் கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர். அவர்ரை  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்த னர்.

இதையடுத்து ஒரகடம் காவல்துறை யினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத் துவமனையில் வைத்துள்ளனர். விவசாயி ஒருவர் இடி தக்கி பலியான சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.