மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கக் கோரி சிஐடியு சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே திங்களன்று (மார்ச்21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பரணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விசுவநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வீர.திருமுருகன், சிஐடியு மாநில துணைத்தலைவர் பி. கருப்பையன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பாபு, வீட்டு வேலை சங்க மாவட்டச் செயலாளர் சாந்தகுமாரி, மாவட்ட பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுபேசினர். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சங்கத்தின் புவனகிரி பகுதி செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, கடலூர் மாவட்ட இணைச் செயலாளர் சங்கமேஸ்வரன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.