districts

குடிசை வீடு தீப்பிடித்து  தொழிலாளி  பலி

காஞ்சிபுரம், ஏப்.2-  காஞ்சிபுரம் அருகே உள்ள திம்ம ராஜம் பேட்டை ஊராட்சி, சீயமங்கலம் காலனியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார் இதையடுத்து சனிக்கிழமையன்று நள்ளிரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடிசை வீடு முழுவதும் பரவியது. இதில் வெங்கடேசும், சரவணனும் சிக்கிக்கொண்டனர்.  அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயில் இருந்து தப்பி முயன்றனர். இதில் சரவணன் லேசான தீக்காயத்துடன் தப்பி வெளியே வந்தார். ஆனால் வெங்கடேஷ் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள்  வந்து தீயை அணனத்தனர். மேலும் பலியான வெங்கடேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.