districts

img

ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து மேடையில் விவாதிக்க தயாரா?

காஞ்சிபுரம், மார்ச் 26- மாநில அரசு திட்டங்கள், ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மோடியை அழைத்து வருவாரா அண்ணா மலை. நாங்கள் தயார் என சவால் விடுத்தார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை. மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் திருப் பெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் க.செல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இதை யொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் “இந்தியா” கூட்டணி சார்பில் வேட்பாளர் கள் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் (மார்ச்.26) செவ்வாய்க் கிழமையன்று திமுக வடக்கு மாவட்டச் செய லாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் க.செல்வம் ஆகியோர் அறிமுகப் படுத்தப்பட்டு அவர்கள்  வாக்குகள் கோரினர்.

இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதும், காலை உணவு திட்டம் நான் முதல்வன், இன்னுயிர் காக்கும் 24 மணி நேரம் என பல எண்ணற்ற திட்டங்களை வாக்குறுதிகள் அளிக்காமல் தமிழக மக்களுக்கு செயல்படுத்திய அரசு இந்த கூட்டணி அரசு. மேலும் இரண்டரை ஆண்டுகளில் மாநில அரசு செயல்படுத்திய திட்டங்கள், 10 ஆண்டுகளாக ஒன்றிய அரசு செயல்படுத் திய திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் அண்ணாமலையுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளதாகவும், வேண்டுமென்றால் மோடியை கூட அண்ணாமலை அழைத்து வரட்டும் விவாதிக்க நாங்கள் தயார் என சவால் விடுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி, எடப்பாடி பழனிச்சாமி எனவும் , இரண்டரை ஆண்டுகளில் 90விழுக்காடு  வாக்குறுதிகளை நிறைவேற்றியும், அளிக் காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய அரசு, இந்த அரசு எனவே இதைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும்.

என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பி னர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வர லட்சுமி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் மதுரை எஸ் சத்யா  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் பீமாராவ், செங்கல்பட்டு மாவட்டச் செய லாளர்  ப.சு.பாரதி அண்ணா, சிபிஐ செயலாளர் ஏ.ராஜ்குமார் எம்.யாகூப் (மமக) உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர்,  செங்கல்பட்டு மா.செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், பா.கார்த்தி (சிபிஐ) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.