districts

img

வாலிபர் சங்க மாநில மாநாடு கள்ளக்குறிச்சியில் வரவேற்புக்குழு அலுவலகம் திறப்பு

கள்ளக்குறிச்சி,ஜூலை 3- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17 வது தமிழ் மாநில மாநாடு கள்ளக்குறிச்சி நகரில் நடைபெறுவதையொட்டி அதன் வரவேற்புக்குழு அலுவலகத்தை சங்கத்தின் முன்னாள் நிர்வாகியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளருமான கே.சாமுவேல்ராஜ் திறந்து வைத்தார். செப்டம்பர் 11,12, 13 ஆகிய மூன்று நாட்க ளில் கள்ளக்குறிச்சி நகரில் இம் மாநாடு நடை பெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி நகரில் பிரபல மருத்துவர் வி.உதயகுமாரை வரவேற்புக்குழு தலை வராகவும், சங்கத்தின் மாவட்ட செயலாளர் வே.ஏழுமலை செயலாள ராகவும், காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் நிர்வாகி கே.வேலாயுதத்தை பொருளாளராகவும் உள்ளடக்கி 500 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டு சுவர் விளம்பரம் உள்ளிட்ட பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகரில் மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.கே.பழனி, செயலாளர் வே.ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;