கள்ளக்குறிச்சி, பிப். 27- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்ர் பேட்டை வட்டம் அதையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 430 மாணவர்கள் பயில்கிறார்கள். 3 கி.மீ தூரமுள்ள தானம் கிராமத்தி லிருந்து 19 மாணவர்கள், 24 மாணவிகள் என 43 பேர் நடந்தே அதையூர் சென்று படித்து வந்தனர். மேலும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் மாணவிகளை நடந்து பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்கியதின் காரணமாக இடைநிற்றலும் அதிகரித்தது. சாலை நன்றாக இருந்தும் பேருந்து வசதி இல்லாததால் ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்து வந்தது. இதையடுத்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தானம் கிராம மாணவர்களை அழைத்துச் சென்று கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளரிடம் மனு அளித்து அதையூருக்கு பேருந்து இயக்க வலியுறுத்தினர். அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து நகரப் பேருந்து தடம் எண் 2 அதையூர் கிராமம் வழியாக தானம் கிராமத்திற்கு ஞாயிறன்று (பிப். 27) இயக்கப்பட்டது. அப்போது தானம் கிராம பொதுமக்களும், மாணவர்களும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஓட்டு னர் கோவிந்தராஜ், நடத்துனர் சங்கர் ஆகி யோருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இதில் வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் எம்.கே.பழனி, துணை செயலாளர் ஜெ.டார்வின், நிர்வாகிகள் இ.சதிஷ்குமார், பி.சேகுவேரா, பள்ளி ஆசிரியர்கள் எம்.கவுதமராஜ், எஸ்.பெரியசாமி, ஏ.சீனிவாசுகி அதையூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், பூண்டி ஊராட்சி மன்றத் தலை வர் சசிகலா மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேருந்து இயக்க உத்தரவிட்ட கள்ளக்குறிச்சி பணிமனை கிளை மேலாளர் விஸ்வநாதன், இதற்காக முயற்சி எடுத்துக்கொண்ட வாலிபர், மாணவர் சங்கத்தினருக்கு பொதுமக்கள் நன்றி கூறினர்.