districts

உரிமம் பெறாத விடுதிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி, மார்ச் 15- உரிமம் பெறாமல் தனியாரால் நடத்தப்பட்டு வரும் இல்லங்கள் மற்றும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனியாரால் நடத்தப்படும்  சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்ய வேண்டும்.  உரிமம் பெறும் முறை, அதற்கான நிபந்தனைகளையும் அரசு அறிவித்திருக்கிறது. எனவே, முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உரிமம் பெறாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.