கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட துவங்கியுள்ளன. இப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் இயக்க நிலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் ஆய்வு முகாம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்து கொண்டார்.