கள்ளக்குறிச்சி, ஜன. 23- சங்கராபுரம் வட்டாட்சியர் முறை கேடாக வழங்கிய வாரிசு சான்றை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர் உறவினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சான்மாபீ - ஜான்பாஷா ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இவர்க ளின் சட்டபடியான வாரிசுகளில் 4 பேர் இறந்து விட்டனர். பவுஜியா, சுமய ஆகியோர் மட்டுமே உயிரோடு உள்ளனர். இந்நிலையில் சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியன் வழங்கிய வாரிசு சான்றில் பவுஜியா என்ற 3ஆவது மகளின் பெயரை மறைத்து வழங்கியுள்ளார். தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுலவகம் வந்த பவுஜியா, வட்டாட்சியர் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும், வாரிசு சான்றை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.