districts

img

ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்: உதயசூரியன் எம்எல்ஏ பங்கேற்பு

கள்ளக்குறிச்சி, மே 27- கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் ஊராட்சியில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணி, ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், ஆறுமுகம், கிருஷ்ணன், சின்னத்தம்பி, ஒன்றிய குழு சேர்மன் அலமேலு ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஆறுமுகம் வரவேற்றார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், சங்கராபுரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான உதய சூரியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது, கடந்த அதிமுக ஆட்சி யின்போது  கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட மாக அறிவித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை 5 கிலோ மீட்டருக்குள் தேர்வு செய்யாமல் கோவில் இடத்தை தேர்வு செய்தனர். இத னால் 13 கோடி ரூபாய் செலவு செய்தும் அந்த பணி முடியாமல் உள்ளது” என்றார். சின்னசேலம் வடக்கு ஒன்றியச் செய லாளர் அன்பு மணிமாறன், பேரூர் கழக செயலாளர்கள் b ஜயவேல், துரை தாகப்பிள்ளை,  செந்தில்குமார், ஒன்றிய குழுத் தலைவர்கள் திலகவதி நாகராஜன், சந்திரன், பன்னீர்செல்வம், ரோஜாரமணி, மாவட்ட கவுன்சிலர் அகிலா பானு அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள் நன்றி கூறினார்.