districts

இறைச்சிகழிவுகள்: நகராட்சித்தலைவர் ஆய்வு

கள்ளக்குறிச்சி,ஏப்.23- கள்ளக்குறிச்சி நகராட்சி யில் ஆறு, குளம், ஏரி பகு திகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். இறைச்சி கழிவுகளை கொட்டுவ தற்கு தனியாக இடம் தேர்வு செய்ய வேண்டி இறைச்சி கடை உரிமை யாளர்களை அழைத்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி நகராட்சி மயானம் அரு கில் காலியாக உள்ள இடத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதற்கு  தேர்வு செய்தனர். இதையடுத்து அந்த பகுதியில் சுமார் 20 அடி ஆழம் 20 அடி நீளத்திற்கு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றது. இதனை கள்ளக்குறிச்சி நகராட்சித் தலைவர்  சுப்ராயலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.