கள்ளக்குறிச்சி, மார்ச்.6- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75ஆவது சுதந்திர தினவிழா - சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா 7 நாட்களுக்கு நடைபெறுவதையொட்டி சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். அப்போது, சுதந்திர போராட்ட தியாகி களின் நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். பின்னர், மாவட்ட மாற்றுத்திறானாளிகள் நலத் துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகளை யும் ஆட்சியர் வழங்கினார். சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியுடன் பல்துறை பணி விளக்கக் கண்காட்சி அரங்கம் அமைக்கப் பட்டு பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தியாகிகளின் திருவுருவப் படங்கள் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர் கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு கையேடுகள், துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.