districts

img

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தகுதியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் அறிவுக்கரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் டி.கலியன், ஒன்றியச் செயலாளர்கள் டி.எஸ்.மோகன், ஜெ. ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.