கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் மூன்று சக்கர வாகனம், ஆன்ட்ராய்டு அலைபேசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இருந்தனர்.