districts

img

கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி, ஜூன் 29- கள்ளக்குறிச்சி அரசு ஆண் மேல் நிலைப்பள்ளி யில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 12ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் சாய்பிரசன்னா 516 மதிப்பெண்களும், 2ஆவது இடம் பிடித்த ஹரீஷ் ராகவேந்திரா 515 மதிப்பெண்களும், 3ஆவது இடம் பிடித்த மூவேந்திரன் 506 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பெற்ற சமீர் 466 மதிப்பெண்களும், 2ஆவது இடம் பிடித்த பூவரசன் 433 மதிப்பெண்களும், மூன்றாவது இடம் பெற்ற அதியமான் 426 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். பள்ளியளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று  இடங்களை பிடித்த மாணவர்களை நகர் மன்ற தலைவர் சுப்பராயலு பாராட்டி ரொக்கப் பரிசு மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்  சந்திரனுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் திமுக நகர துணைச்செயலாளர் அப்துல்ரசாக், இயக்குனர் அருண் கென்னடி, கவுன்சி லர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.