மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காச நோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருந்திய வாகனத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இணை இயக்குநர் பாலச்சந்தர், துணை இயக்குநர் (காச நோய்) சுதாகர், பொது சுகாதாரம் துணை இயக்குநர் ராஜா, நெஞ்சக நோய் நிபுணர் ராஜ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் நேரு, துணை மருத்துவ கண்காணிப்பாளர் பழமலை, உதவி மருத்துவ அலுவலர் பொய்யாமொழி, தேசிய சுகாதார குமுமத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.