districts

ஜன.26 ஊராட்சி மன்றத் தலைவர் மட்டுமே கொடியேற்ற வேண்டும்: ஆட்சியர்

கள்ளக்குறிச்சி, ஜன. 21- குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்றத் தலைவர் மட்டுமே கொடி யேற்ற வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தியுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கள்ளக் குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசுகையில், “கிராம பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும். கணவர், மகன், உறவினர்கள் தலையீடு இருக்கக் கூடாது”என்றார். ஊராட்சி மன்றத் தலைவர்கள், கணக்குகளை நன்கு பராமரிக்க தெரிந்துக்கொள்ள வேண்டும். வளர்ச்சிப் பணிகளில் குடி தண்ணீருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் மட்டுமே தேசியக் கொடியேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.