கள்ளக்குறிச்சி, அக். 21- கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலைப் பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தொரடிப்பட்டு ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வியாழனன்று(அக்.20) இரவு பெய்த கனமழையின் காரணமாக, சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, மக்காச்சோளம், பீன்ஸ் பயிர் கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டது. 10க்கும் மேறப்பட்ட மின்கம்பங்க ளும், 8 ஆயில்கள் என்ஜின் பம்பு செட்டுக ளும், நூற்றுக்கு மேற்பட்ட தென்னை மரங்களும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்கு கன்று கள், 1,000 சில்வர் மரங்கள் தண்ணீரில் மூழ்கின. தார் சாலைகளும், பாலங்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. 20க்கும் மேற்பட்ட கிணறுகள் தரைமட்டமாகி யுள்ளன. மேல்முருவம், தொராங்கூர், தாழ் தொரடிப்பட்டு, எழுத்தூர் மட்டப்பட்டு, எருக்கம்பட்டு, ஆகிய கிராமங்கள் அதிகள வில் பாதிக்கப்பட்டுள்ளன. 2 ஏக்கர் பரப்பள வில் உள்ள கரும்பு தண்ணீரில் மூழ்கி சேத மடைந்துள்ளது. தார் சாலை போடுவதற்காக வைத்திருந்த 200 யூனிட் ஜல்லி கற்கள், 12 இருசக்கர வாகனம் ஆகியவையும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்டக் கலை மற்றும் வேளாண் துறை மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.