கள்ளக்குறிச்சி,டிச.12- சங்கராபுரம் அருகே கன மழையால் கொசப்பாடி ஏரி உடைந்து கிராமத்துக்குள் புகுந்ததால் குடிசைகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் ஏரி, குளங்க ளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. சங்கரா புரம் வட்டத்திற்குட்பட்ட கொசபப்பாடி, செல்லம்பட்டு ஜவுளிக்குப்பம் ஆகிய கிராமங்க ளுக்குள் நீர் புகுந்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்ததால் 100 ஏக்க ருக்கும் மேலாக விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. மேலும், கிராமச் சாலைகள் தரை மட்டத்திலிருந்து உயர்வாக அமைக்கப்பட்டு, வடிகால் வாய்க்காலும் முறையாக அமைக்காததால் ஏரி தண்ணீர் குடியிருப்புகளுக்கு புகுந்து அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மழை காலங்களில் ஏரி உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் வருவது வாடிக்கையாக இருந்தும் ஊராட்சி மன்ற நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் தொடர்ந்து பாதிக்கப் படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.