districts

img

மின் கம்பங்களை மாற்ற சிபிஎம் கோரிக் கை

கள்ளக்குறிச்சி, மார்ச் 28- பாண்டூர் ஊராட்சி அரளி கிராமத்தில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பாண்டூர். காலனி, அரளி  காலனி மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும், அனைவருக்கும் அடையாள  அட்டை வழங்க வேண்டும், அரளி காலனி பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும், காலனியில் இருந்து பிரதான சாலை வரை தெரு விளக்கு அமைக்க வேண்டும், 8ஆவது வார்டில் பழுதடைந்துள்ள மினி டேங்க்கை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநாவலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரளி கிளை செயலாளர் பி.மாணிக்கம்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன், ஒன்றியக் குழு உறுப்பினர் கி.ஆனந்த்ராஜ், வி.ராஜி, டி.ரகு, பரிமளா, ஜெயலட்சுமி, மஞ்சுளா, அஞ்சுலட்சமி, சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும்  கலைந்து சென்றனர்.