districts

img

மாரனோடை கிராமத்திற்கு அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 16- மாரனோடை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திரு நாவலூர் ஒன்றியம், சேந்தமங்கலம் ஊராட்சிமன்றத்திற்குட்பட்ட கிராமங்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறை வேற்றாமல் காலம் கடத்தும் அரசு நிர்வாகத்தை கண்டித்து கிளைச் செய லாளர் சி.பெரியநாயகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயகுமார், மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.வி.ஏழுமலை. டி.ராஜீவ் காந்தி, கே.வேல்முருகன் மற்றும் பலர் உரை யாற்றினர். திருநாவலூர் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள பெரிய மாரனோடை கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும். சின்ன மாரனோடை, பெரிய மாரனோடை பகுதிகளிலுள்ள குடிநீர் கிணறுகளுக்கு மேல் மூடி அமைத்துக் கொடுக்க வேண்டும். பரிக்கல் கிராமத்தில் இருந்து மானோடைக்கு செல்லும் ராகவன் கால்வாயை சீர் செய்து கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கடலூரில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.