கள்ளக்குறிச்சி, ஜூன் 23- கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறு வனங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வதும் பாரதி கல்வி நிறுவனம் சின்னசேலம், தச்சூர், பங்காரம், வடக்கனந்தல் ஆகிய பகுதிகளில் நடத்தி வரும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்வில் ஷிவானி 586 மதிப்பெண்களும், அ.அபர்ணா 578 மதிப்பெண்களும், மோனிகாஸ்ரீ 577 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடத்தை பிடித்தனர். அதேபோல் 10ஆம் வகுப்ப்பு தேர்வில், ரபிப்பா 456 மதிப்பெண்களும், சுவேதா 481 மதிப்பெண்களும், வர்னிகா 477 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். தேர்வில் சாதனை படைத்த மாண வர்களை பள்ளியின் தாளாளர் கந்தசாமி, செயலாளர் லட்சுமி கந்தசாமி, ஆக்சாலிஸ் பள்ளியின் தாளாளர் பரத்குமார், பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்கள் பாராட்டினர். கல்வி நிறுவன செயலாளர் லட்சுமி கந்தசாமி கூறுகையில், “பாரதி கல்வி நிறு வன பள்ளிகளில் தற்போது 11ஆம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் 481க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 100 விழுக்காடு கட்டண முழுமையாக கட்டண சலுகை வழங்கப்படும்” என்றார். 471க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்க ளுக்கு 70 விழுக்காடும், 461க்கு 60 விழுக்காடும், 451க்கு மேல் 50 விழுக்காடும், 426க்கு மேல் 40 விழுக்காடும், 401க்கு மேல் 25 விழுக்காடும், 375க்கு மேல் 10 விழுக்காடு கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படும் என்றும் கூறிய அவர், 490 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 75 விழுக்காடும், 481க்கு மேல் 50 விழுக்காடும் விடுதி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்றும் கூறினார்.