districts

img

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்

 கள்ளக்குறிச்சி, ஜூன் 21- கள்ளக்குறிச்சியில் விஷச்சா ராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை துயரகரமான முறை யில் 51 ஆக அதிகரித்துள்ளது. 

சிகிச்சை பலனின்றி கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனையில் 28 பேர், சேலம் அரசு மருத்துவ மனையில் 16  பேர், விழுப்புரம் அரசு  மருத்துவமனையில் 4 பேர், புதுச் சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனை யில் மூவர் என இதுவரை மொத்தம் 51 பேர் உயிரிழந்தனர். 

சிகிச்சை பலனின்றி கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனையில் 28 பேர், சேலம் அரசு மருத்துவ மனையில் 16  பேர், விழுப்புரம் அரசு  மருத்துவமனையில் 4 பேர், புதுச் சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனை யில் மூவர் என இதுவரை மொத்தம் 51 பேர் உயிரிழந்தனர். 

கைது நடவடிக்கை

கள்ளச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கண்ணுக் குட்டி, விஜய், தாமோதரன் ஆகிய மூன்று பேர் மீது 328, 304 (2), 41 ஐ, 41 ஏ ஆகிய 4 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்த கள்ளக் குறிச்சி காவல்துறையினர் மூவரை யும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் மூவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மூவரையில் ஜூலை 5-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதி மன்றக் காவலில் அடைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார். இந்நிலை யில் உயிரிழந்த குடும்பத்திற்கு மாநில அரசு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது. 

முக்கிய நபர் கைது  

51 பேர் மரணத்திற்கு காரண மான கள்ளச்சாராய விற்பனை விவ காரத்தில் முக்கிய குற்றவாளி யான சின்னதுரை கைது செய்யப் பட்டுள்ளார். கடலூரில் பதுங்கி யிருந்த அவரை தனிப்படை வெள்ளி யன்று (ஜூன் 21) போலீசார் கைது செய்தனர். 

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆய்வு

இதனிடையே, தலைமை செய லாளர் சிவ்தாஸ் மீனா வெள்ளிக் கிழமை மாலை அவசர ஆலோ சனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப் பாளர்களுடன் தலைமைச் செய லகத்தில் இருந்து காணொலி வாயி லாக ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். ஆலோசனை யின்போது, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நட மாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

நீதிபதி ஆய்வு 

இதனிடையே இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஆணையத்தின் நீதிபதி கோகுல்தாஸ், கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். முன்ன தாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மருத்துவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளிடம் விசார ணை நடத்தினார்.  இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜித் சதுர்வேதி ஆகியோர் உடனிருந்தனர்.