கரூர், ஏப்.22 - கரூர் தாந்தோன்றிமலை அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் வியாழ னன்று கால்நடை பராம ரிப்புத் துறையின் மூலம் நடை பெற்ற கால்நடை பரா மரிப்பு உதவியாளர் பணியி டத்திற்கான நேர்காணலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத் திற்கான நேர்காணல் 21.4. 2022 முதல் 26.4.2022 வரை (24.4.2022 தவிர மற்ற நாட்க ளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை) நடைபெறும். மொத்தம் 24 பணியிடங்களுக்கு 3582 விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு நேர் முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு தினசரி 800 நபர்கள் வீதம் 4 நாட்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் சான்றிதழ் சரி பார்ப்பு, கால்நடை பரா மரிப்பு, மிதிவண்டி ஓட்டுதல் போன்ற அடிப்படை செயல் முறைகள் குறித்து நேர்கா ணல் நடைபெறும் இடத்தை நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில அளவை) கவிதா, கால்நடை பராமரிப்புத் துறை கரூர் மண்டல இணை இயக்குநர் மரு.ந.முரளிதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.