கரூர், டிச.28- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் கரூர் கிளை முன்பு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.பரமேஸ்வரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. முருகேசன், போக்குவரத்து தொழிலாளர் சங்க ஈரோடு மண்டல பொதுச்செயலாளர் டி.ஜான்சன் கென்னடி, மாவட்டச் செயலா ளர் பி.குணசேகரன் ஆகியோர் விளக்கிப் பேசினர். மாவட்டப் பொருளாளர் எஸ். ராஜலிங்கம் நன்றி கூறினார். சங்க நிர்வாகி கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.