districts

img

புகழூர் நகராட்சி நகர்மன்ற தலைவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

கரூர், மார்ச்.6- கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக் கப் பட்ட புகழூர் நகராட்சியின் முதல் நகர் மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த குண சேகரன் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கடந்த 7.12.2019 அன்று புஞ்சைபுகழூர் பேரூராட்சியுடன் தமிழ்நாடு காகித ஆலை புகழூர் பேரூராட்சி இணைக்கப்பட்டு இரண் டாம் நிலை நகராட்சியாக உருவாக்கப் பட்டது.  இந்நிலையில், நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 20 வார்டு களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், அதிமுக, பாஜக தலா 1 வார்டு களிலும் வெற்றி பெற்றன.  மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்ற தலைவர் தேர்தலில் புகளூர் நகராட்சியின் முதல் தலைவராக திமுகவை சேர்ந்த 2-ஆவது வார்டு கவுன்சிலர் குணசேகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 19-ஆவது வார்டு கவுன்சிலர் பிரதாபன் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
இந்நிலையில், வெற்றி பெற்ற நகர்மன்ற தலைவர் எ.சேகர்(எ)குணசேகரனை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஜீவானந்தம், கரூர் ஒன்றிய செய லாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து கட்சியின் சார்பில் வாழ்த்துக் களை தெரிவித்தனர்.

;