districts

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூர், மார்ச் 19 - தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்ப ணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு ‘பசுமை சாம்பியன் விருது’  100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக  தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவ னங்கள் / கல்வி நிறுவனங்கள் / குடியிருப் போர் நல சங்கங்கள் / தனிநபர்கள் / உள் ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள் / பசுமை  தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர்  நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத் திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவு களின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவ டிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நட வடிக்கை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம். இதற்கு மாவட்ட ஆட்சியரின் தலைமை யில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது  தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100  தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வரு டமும் தேர்வு செய்யும். இதில் கரூர் மாவட்டத் திற்கென 3 விருதுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்னும் கூடுதல் தகவல்கள்  தேவைப்படுவோர் கரூர் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியத்தை அணுகலாம். பசுமை சாம்பியன் விருது 2021-க்கு  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 31.3.2022 -க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை  சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.