கரூர், ஏப்.7- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் கரூர் மாவட்டக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜ.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. கடவூர் வட்டாரத்தில் நடைபெற்ற பதவி உயர்வு குளறுபடிகளால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடவூர் வட்டாரச் செய லாளர் மா.மோகனை குளித்தலை மாவட்டக்கல்வி அலுவலரால் தற்கா லிக பணிநீக்கம் செய்யப்பட்டுள் ளார். இந்த செயல் முழுக்க விதி களுக்கு புறம்பான பழிவாங்கும் நடவடிக்கையாகும், இந்த பழி வாங்கும் நடவடிக்கையை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. கடவூர் ஒன்றிய ஆசிரியர் மோகன் மீது எடுக்கப்பட்ட சஸ்பென்ட் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட குழு சார்பில் வழங்கப்பட்டது. கலந்தாய்வில் கலந்து கொள்ளு மாறு சம்பந்தப்பட்ட கடவூர் வட்டா ரக்கல்வி அலுவலர் அழைப்பு கொடுத்ததின் பேரில் தான் மோகன் கலந்தாய்வில் கலந்து கொண்டார். சரியான பட்டியலை தயாரிக்க வேண்டியது வட்டாரக்கல்வி அலுவலரின் கடமை. அதற்கு சரி பார்த்து ஒப்புதல் வழங்கவேண்டி யது மாவட்டக்கல்வி அலுவலரின் கடமை. தனது கடமையை சரிவர செய்யாத மாவட்டக்கல்வி அலு வலரே இந்நிகழ்வில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே அப்பாவி ஆசிரியர் மீது நடவ டிக்கை எடுத்துள்ளார். எனவே, மா.மோகன் மீது எடுக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் மாவட்ட குழு சார்பில் ஏப்ரல் 11 அன்று முதல் காத்திருப்பு போராட்டம் குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடத்துவது எனவும் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஜா.ஜெயராஜ் கூறினார்.