கரூர், ஏப்.7- மணல் குவாரிகளை திறக்கக் கோரி கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க மாவட் டக்குழு சார்பில் பொதுப்பணித்துறை அலுவலகம் நொய்யல் இல்லம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு சங்க கரூர் மாவட்ட செயலாளர் சி.முரு கேசன் கோரிக்கை விளக்கிப் பேசி னார். சங்க மாவட்ட குழு உறுப்பினர் கள் பிரகாஷ், குமார், பாலசுப்பிர மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி தமிழக அரசால் அறி விக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட மணல் குவாரிகளை திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதை கை விட்டு, அறிவித்துள்ள மணல் குவாரி களை உடனடியாக திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். நீர்வளத் துறை மானியக் கோரிக்கையில் மணல் அள்ளுவதற்கு நடவடிக்கை யாக தமிழக அரசு அறிவிப்பு வெளி யிட வேண்டும். கடந்த காலத்தில் மணல் அள்ளுவதற்கு இருந்த நடை முறையே தற்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டன.