கரூர், பிப்.15 - திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி 10 ஆவது வார்டில் அரி வாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத் தில் போட்டியிடும் தேவி நாகராஜ னுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து தாரை தப்பட்டைகள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது வேட்பாளர் தேவி நாகரா ஜன் கூறுகையில், “சிபிஎம் சார்பில் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி யில் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றி கொடுத்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். நான் 10 ஆவது வார்டு கவுன்சில ராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த வார்டில் உள்ள அனைத்து பகுதிகளுக் கும் தெரு விளக்குகள் அமைத்து தரப்ப டும். தெரு விளக்குகள் இல்லாத பகுதி களில் புதிய தெரு விளக்குகள் அமைக் கப்படும். அதிக மக்கள் தொகை கொண்ட இந்த வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படும். அனைத்து தெருக்களிலும் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்படும். சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை விரிவுபடுத்தி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சமுதாய கூடத்தை விரிவுபடுத்தி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் நலனுக்கா பொது சுகாதார வளாகம் அமைத்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்ப டும். மக்களின் கோரிக்கைகளை உடனுக் குடன் கேட்டறிந்து நிறைவேற்றிட காத்திருக்கிறேன். தாங்கள் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார். திமுக கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ரவிராஜா, பழைய ஜெயங் கொண்டம் நகர செயலாளர் மோகன் ராஜ், 10 ஆவது வார்டு செயலாளர் பரமசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர் வி.நாகராஜ், பழைய ஜெயங்கொண்டம் கிளை செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் பிரச்சாரத் தில் பங்கேற்றனர்.