districts

img

தேசிய மாணவர் அறிவியல் தேர்வு: பரணி வித்யாலயா மாணவிகள் சாதனை

கரூர், ஏப்.11 - இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு விஞ்ஞான் பாரதி சார்பாக இந்திய மாணவர்களின் அறிவியல் சிந்தனையை தூண்டும் விதமாக அறிவியல் சங்கம் சார்பாக இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் இணைந்து தேசிய அறிவியல் மாணவர் தேர்வுகள் இணையம் வாயிலாக நடத்தப்பட்டன. தமிழகத்தின் சார்பில் 10,480 மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டனர். இதில் பரணி வித்யாலயா மாணவிகள் அஸ்வதி ஜெயபிரகாஷ் மாநில அளவில் இரண்டாமிடத்தையும், ஜெ.வைஷ்ணவி மாநில அளவில் மூன்றாமிடத்தையும் பெற்றனர். மாநில அளவில் சாதனை புரிந்த மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு விழா திருச்சி தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இப்பாராட்டு விழாவில் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் உமா, அறிவியல் சங்கத்தின் தமிழக பொது செயலாளர் சபாநாயகம், விஞ்ஞான் பாரதி மாநில அமைப்பு செயலாளர் கோபால் பார்த்தசாரதி, அழகப்பா பல்கலைக்கழக ஃபயோ இன்பர்மேட்டிக்ஸ் துறை தலைவர் பேரா. ஜெயகாந்தன் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவியர்கள் மற்றும் பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் ஆகியோருக்கு சான்றிதழ், பணப்பரிசு, வெற்றிக் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.