கரூர், ஜன.2- கரூர் மாவட்டம் மாவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ரெட்டியப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளையின் சார்பில் 21-ஆம் ஆண்டு கபடி போட்டி பகத்சிங் விளையாட்டு திடலில் 2 நாட்கள் நடைபெற்றது. போட்டிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கே.பிரபாகுமார் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், சிபிஎம் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சக்திவேல், பி.ராமமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.பார்த்திபன், சிபிஎம், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர்கள் கலந்துகொண்டனர்.