கரூர், அக்.16 - கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காணியாளம்பட்டி, காளையாப்பட்டி, சின்னான்டிப்பட்டி, துளசிக்கொடும்பு ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இந்த புதிய மின்மாற்றிகளின் துவக்க விழாவிற்கு, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமை வகித்து, 4 இடங்களிலும் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்து பேசினார். திமுக கடவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.ராமலிங்கம், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.சுதாகர், மாவட்ட கவுன்சிலர் நந்தினி தமிழ்செல்வன், கரூர் செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள், காணியாளம்பட்டி உதவி செயற்பொறியாளர் மதியழகன், காளையப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியமேரி, மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாரிதங்காள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.