districts

ஜாக்டோ - ஜியோ போராட்டக் காலத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க கோரிக்கை

கரூர், அக்.14 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கரூர்  மாவட்ட பேரவை சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செய லாளர் சி.இளங்கோவன் வேலை அறிக்கை யையும், மாவட்ட பொருளாளர் மு.செல்வ ராணி வரவு -செலவு கணக்கையும் முன் வைத்தனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செய லாளர் ஞானத்தம்பி பேரவையை துவக்கி வைத்து பேசினார். கரூர் மாவட்ட தலை வர் மு.சுப்ரமணியன், மாநிலச் செயலாளர் மு.செல்வராணி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாஷா ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஏ.பெரியசாமி பேரவையை நிறைவு செய்து பேசினார். மாநில செயற் குழு உறுப்பினர் தமிழ்மணி நன்றி கூறினார்.  ஒன்றிய அரசு அறிவித்த அகவிலைப் படியை உடனே வழங்கிட வேண்டும். தேர்தல்  கால வாக்குறுதிகளை தமிழக அரசு நிறை வேற்ற வலியுறுத்தி அனைத்து ஒன்றியங்களி லும் சத்துணவு திட்டம் பாதுகாப்பு, உரிமை  மீட்பு கையெழுத்து இயக்கம் நடத்தி முதல்வ ருக்கு அனுப்புவது, கரூர் மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஜாக்டோ-  ஜியோ போராட்ட காலத்தில் பிடித்தம் செய்த  ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.  மேற்கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.