districts

வளர்ச்சித் திட்ட பணிகளை பார்வையிட்ட கரூர் ஆட்சியர்

கரூர், மார்ச் 21 - கரூர்‌ மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னம்பட்டி, நல்லகுமரன்பட்டி, தேத்துப்பட்டி, பண்ணபட்டி, ஜமீன் ஆத்தூர் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், கோட்டையூர் ஊராட்சியில் சின்னம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சின்னம்பட்டி ஓடையில் நடுவே கட்டப்பட்டுள்ள தடுப்பணையினையும், நல்லகுமரன்பட்டி கிராம பகுதியில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள துவரை மற்றும் முருங்கை பயிர்களுக்கு  மண் வரப்பு அமைக்கும் பணிகளையும், எருமார்ப்பட்டி ஊராட்சி, பண்ணப்பட்டி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முடிவுற்ற புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடத்தினையும் பார்வையிட்டார். மேலும், அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முருங்கை விதை மூலம் கண் வளர்க்கும் பணிகளையும், அம்மாபட்டி ஊராட்சி, ஜமீன் ஆத்தூர் கிராம பகுதியில் பொது நிதி திட்டத்தின் கீழ் பொது கழிப்பறை புனரமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர்  நேரில் பார்வையிட்டார்.  தெத்துப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம நூலகக் கட்டிடம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், நூலகத்தினை நல்ல முறையில் புனரமைத்து, நூலகங்களின் முக்கியத்துவம் குறித்தும், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இடம்பெறும் வகையிலும் சுவர்களில் ஓவியம் வரைய வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  ஆய்வின் போது திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை மந்திராச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.